வியாபாரிகளுக்கு ஒரு விண்ணப்பம்
வியாபாரிகளுக்கு ஒரு விண்ணப்பம்
மரணங்கள் மலிந்த தேசத்தில் நாமிங்கு....
மிரண்டுபோய் கிடக்கின்றோம் கொரோனாவின் கோரப்பிடிக்குள்
பொதுமுடக்கத்தின் நீ...டிப்பால்... ....அனைவரின் பொருளாதாரமும்
பொசுங்கிக் கிடக்கும் பொல்லாத கொவிட் காலமிது
மரமேறி விழுந்தவனை மாடேறி மிதித்ததுபோல
அரிசி, பருப்பு , சீனியெலாம் முதலில் யானைவிலை
அங்கர்,ரத்தி பால்மா இன்னும்சில இன்னும் .....தலைமறைவு
நியாயவிலையில் வாங்கிடவோ நீ...ண்ட ...வரிசை
கால்கடுக்க பலமணிநேரம் நின்றாலும் அதுகூட
ஒருகிலோ சீனிதான் சிலவேளை ??? அதுவும் இல்லை
பதுக்கி வைத்து விற்றுப் பணமீட்ட
இதுதான் சந்தர்ப்பமா சிந்தியுங்கள் வியாபாரிகளே !
வரும்போது நாமெதுவும் கொண்டுவரவில்லை
போகும்போதும் எதுவும் கூடவரப்போவதில்லை
இறுதியில்....இறுதியின் இறுதியாய் ... ....
யார் யார் முகத்தை யார்யார் பார்ப்பாரோ !
இல்லை பார்ப்போமோ ! இல்லை அதுவும் இல்லையோ !!!
யாரறிவார் இயற்கையின் நியதியை யாரும் அறிகிலார்
இதற்கிடையில் பதுக்கி இவைத்து விற்காமல்
நியாயமாய் நடந்து மானுடத்தை காத்திடுங்கள்
சிந்தியுங்கள்... வியாபாரிகளே ! சிந்தியுங்கள்...
ஒருகணமேனும் .... சிந்தியுங்கள் வியாபாரிகளே !! சிந்தியுங்கள் .... ....
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பதிலளிநீக்குகவிதை மிகவும் சிறப்பாக உள்ளது ரூபி ! நல்வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குமிக்க நன்றி !
நீக்கு